திருச் சொரூபங்கள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசேட விசாரணைக்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

ஆசிரியர் - Editor I
திருச் சொரூபங்கள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசேட விசாரணைக்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் கிறிஸ்த்த மதத்தினருக்கு சொந்தமான திருச் சொரூபங்கள் சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து சிறப்பு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 இடங்களில் அடுத்தடுத்து திருச் சொரூபங்களை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன், இந்த சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளை 

பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தொிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு