யாழ்.பருத்தித்துறை நகருக்குள் நுழையவோ, வெளியேறவோ தடை..! வர்த்தக நிலையங்கள் பூட்டு, நாளை காலை முடக்க அறிவிப்பு வெளியாகலாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை நகருக்குள் நுழையவோ, வெளியேறவோ தடை..! வர்த்தக நிலையங்கள் பூட்டு, நாளை காலை முடக்க அறிவிப்பு வெளியாகலாம்..

யாழ்.பருத்தித்துறை நகரை அண்டிய பகுதி மற்றும் சந்தை பகுதிகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை நகர் பகுதி மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது. 

குறித்த தகவல் ஒலி பெருக்கி ஊடாக பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் காண்காணிப்பு நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகவும் பிரதேச தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 

வர்த்தக நிலையங்களை  மூடுமாறும் மறு அறிவித்தல் வரையில் வெளியேறவோ உள் நுழையவோ வேண்டாம் என்றும் சுகாதாரத் தரப்பினர் அறிவித்துவருகின்றனர்.  இதனால் மெத்தக்கடைச் சந்தி, ஓடக்கரை வீதி, 

சுப்பர்மடம் கடற்கரை வீதி உட்பட்ட பகுதிகளில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு நாளை முடக்கப்படும் என்று தெரியவருகிறது. கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டதையடுத்து 

மறு அறிவித்தல் வரும் வரை முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு