15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!!

ஆசிரியர் - Admin
15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் முயற்சியில் மன்னார் மற்றும் முல்லைத்தீவில் 15 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்தப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆயிரம் மாகாண பாடசாலைகளில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் செயற்றிட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பதினைந்து பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பிரதிபலனாக

மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மன்னார் கல்வி வலயத்தில் பாத்திமா ம.ம.வி,எருக்கலப்பிட்டி ம.ம.வி, அரிப்பு றோ.க.த.க பாடசாலை, முருங்கன் ம.வி சென்.ஏன்ஸ் ம.வி நானாட்டான் டிலாசல் கல்லூரி ஆகிய ஆறு பாடசாலைகளும்

மடுக்கல்வி வலயத்தில் அடம்பன்.ம.ம.வி,பெரிய பண்டிவிரிச்சான் ம.வி ஆகிய இரண்டு பாடசாலைகளும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்தில் மாங்குளம் ம.வி, ஒட்டுசுட்டான் ம.வி,யோகபுரம் ம.வி பாலிநகர் ம.வி.ஆகிய நான்கு பாடசாலைகளும்

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, உடையார்கட்டு ம.வி முல்லைத்தீவு ம.வி ஆகிய மூன்று பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இதேவேளை தரமுயர்த்தப்பட்ட குறித்த பாடசாலைகளின் பெயர்களை மாற்றம் செய்து பெயர்ப்பலகைகள் இடுவதற்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா கல்வியமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு