யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி இன்று அதிகாலை 4 மணி தொடக்கம் தீவிர கண்காணிப்பின் கீழ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி இன்று அதிகாலை 4 மணி தொடக்கம் தீவிர கண்காணிப்பின் கீழ்..

கோப்புபடம்

யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் இரு நாட்களில் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த பகுதி இன்று அதிகாலை 4 மணி தொடக்கம், சுகாதார பிரிவு மற்றும் படையினரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. 

குறித்த பகுதியில் 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் செறிந்து வாழும் குறித்த பகுதியை முடக்குவதற்கு சுகாதாரத் தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் 

படைத்தரப்பினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு