மீண்டும் பேராபத்தில் யாழ்ப்பாணம்! மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
மீண்டும் பேராபத்தில் யாழ்ப்பாணம்! மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 53 பேர் உட்பட வடக்கில் 65 பேருக்கும், 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 38 பேருக்கும், 

தம்பாட்டி கிராமத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்குமாக யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு தொற்று உறுதியானது. 

கடந்த சில நாட்களில் குறைந்துவந்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை யாழ்.மாவட்டத்தில் மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு