யாழ்.பருத்தித்துறை நகரில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை நகரில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.பருத்தித்துறை நகரை அண்டிய 1ம், 2ம், 3ம் குறுக்கு தெருக்களில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை எழுமாறாக 156 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர். ஏனைய 17 பேரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதவேளை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பீ.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு