யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் 38 பேருக்கு கொரோனா, 2 நாட்களில் 48 பேருக்கு தொற்று, பிரதேசத்தை முடக்க நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் 38 பேருக்கு கொரோனா, 2 நாட்களில் 48 பேருக்கு தொற்று, பிரதேசத்தை முடக்க நடவடிக்கை..

யாழ்.வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த பகுதியில் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் நேற்றய தினம் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் நேற்றுமுன்தினம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. 

அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.மேலும் 32 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 

9 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று 

பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்றுமுன்தினம் 9 பேருக்கு தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு