யாழ்.தெல்லிப்பழையில் வீடுடைத்து கொள்ளை! 21வயது, 22 வயதான இருவர் கைது, பொருட்களும் மீட்பு, பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்பாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் வீடுடைத்து கொள்ளை! 21வயது, 22 வயதான இருவர் கைது, பொருட்களும் மீட்பு, பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்பாம்..

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தொலைபேசி ஒன்று, துவச்சக்கர வண்டியகள் 4 உள்ளிட்ட பெறுமதியான பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார் சுன்னாகம் - மயிலங்காடு பகுதியை சேர்ந்த 

21, 22 வயதான இருவேரே நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், 

விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன், பொருட்களையும் மீட்டுள்ளனர். 

இதேவேளை கைது செய்யப்பட்ட திருடர்களுக்கு வேறு திருட்டு சம்பவங்களுடனும் தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு