யாழ்.போதனா வைத்தியசாலை, மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 288 பேருக்கு தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை, மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 288 பேருக்கு தொற்று..!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் 1002 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 288 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 291 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே 248 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் 18 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் மன்னார் கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 711 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு