யாழ்.மீசாலையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு! வர்த்தகர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மீசாலையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு! வர்த்தகர் படுகாயம்..

யாழ்.மீசாலை பகுதியில் நேற்றய தினம் இரவு வாள்வெட்டு குழு வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதில் வர்த்தகர் படுகாயமடைந்துள்ளார். 

மீசாலைக்கும் சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் இரவு 8.00 மணியளவில் குறித்த வன்முறை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அந்தப் பகுதியில் அழகுசாதன வர்த்த நிலையம் நடாத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் 

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு