யாழ்.சித்தங்கேணி சிவன்கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சித்தங்கேணி சிவன்கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்..

யாழ்.சித்தங்கேணி - சிவன்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் டுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கும் வேறு ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டிருந்தவர் கோவிலின் நிர்வாகத்தில் உள்ளவ வாளால் வெட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது வாள் கீழே விழுந்ததையடுத்து அந்த வாள் மீட்கப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வாள் வெட்டினை மேற்கொண்டவர் திருநெல்வேலியை சேர்ந்தவர் எனவும் 

கோவில் தகராறு காரணமாகவே வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு