யாழ்.பருத்தித்துறை ஜே/401 கிராமசேவகர் பிரிவு இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் முடக்கம்! தேசிய கொவிட் செயலணி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை ஜே/401 கிராமசேவகர் பிரிவு இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் முடக்கம்! தேசிய கொவிட் செயலணி அறிவிப்பு..

யாழ்.பருத்தித்துறையில் மேலும் ஒரு பகுதி இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் முடக்கப்படுவதாக இராணுவ தளபதி , ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 

இதன்படி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட ஜே - 401 கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி இன்று அதிகாலை 6.00 மணி முதல் முடக்கப்பட்டது.

பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவில் வசித்து வருவோரிடையே கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு 

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.இதையடுத்து குறித்த பகுதியை தனிமைப்படுத்துவதற்காக சுகாதாரத் தரப்பினரால் 

கொவிட்-19 செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டு அதற்கான முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று அதிகாலை 6.00 மணி முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இராணுவத் தளபதியால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு