யாழ்.மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கில் 66 பேருக்கு கொரோனா தொற்று! யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கில் 66 பேருக்கு கொரோனா தொற்று! யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் தொடர்கிறது..

யாழ்.மோவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 850 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் முடிவுகளின் விபரம் வருமாறு,

யாழ் மாவட்டத்தில் 48 பேர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 05 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சங்கானை சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர்,

மன்னார் மாவட்டத்தில் 07 பேர், மன்னார் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பேர், பூநகரி காதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 04 பேர், வவுனியா சித்த ஆயுள்வேத ஆதார வைத்தியசாலையில் 04 பேர், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு