யாழ்.புங்குடுதீவு - குறிகட்டுவானில் கரையொதுங்கும் மருத்துவ கழிவுகள்! இப்போவதாவது ஆய்வு நடத்தப்படுமா?

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவு - குறிகட்டுவானில் கரையொதுங்கும் மருத்துவ கழிவுகள்! இப்போவதாவது ஆய்வு நடத்தப்படுமா?

யாழ்.புங்குடுதீவு - குறிகட்டுவானில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருவதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்திய மருத்துவ கழிவுகளே இவ்வாறு கரையொதுங்கிவருவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் இலட்சினைகள், பெயர்கள் உள்ளதாகவும் கூறினர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக யாழ்.நெடுந்தீவு, நயினாதீவு கரையோரங்களில் இவ்வாறான மருத்துவ கழிவுகள் ஒதுங்கியிருந்தது. 

இந்நிலையில் அவை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும் என மாகாண சுகாதார பிரிவினர் மற்றும் கடல்வள பாதுகாப்புடன் தொடர்புடையோர்

அதன் பின்னர் மௌனமாகவே இருந்துவிட்ட நிலையில், தற்போது குறிகட்டுவான் பகுதியில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கிவருகின்றன. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு