தனிமையில் வசித்த பெண்ணை வீட்டுக்குள் புகுந்து வண்புணர்ந்த நபர் கைது! யாழ்.வல்வெட்டித்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தனிமையில் வசித்த பெண்ணை வீட்டுக்குள் புகுந்து வண்புணர்ந்த நபர் கைது! யாழ்.வல்வெட்டித்துறையில் சம்பவம்..

யாழ்.வல்வெட்டித்துறையில் தனிமையில் வாழ்ந்த 35 வயதான பெண்ணை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் 30 வயதான நபர் ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் இரவு குறித்த நபர் தனிமையில் வசதித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை வன்புணர்ந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் காயங்களுக்கும் உள்ளான நிலையில் 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதான நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

அவர் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை,வன்புணர்வு, படுகாயம் ஏற்படுத்தியமை, மற்றும் அத்துமீறி வீடு புகுந்தமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு