யாழ்.மாவட்டத்தில் 5957 ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி! சுகாதாரதுறையின் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 5957 ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி! சுகாதாரதுறையின் அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 5957 ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும்  மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 2ம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் தடுப்பூசிகளில் நேற்று 5ஆவது நாளில் 7 ஆயிரத்து 266 பேர் 

தமக்கான முதலாவது டோஸைப் பெற்றுக் கொண்டனர். கடந்த 5 நாள்களில் 45 ஆயிரத்து 722 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர். 

யாழ்.மாவட்டத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10 ஆயிரத்து 354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக 

விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அவர்களில் 5 ஆயிரத்து 957 இன்று கோவிட்-19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது. 

இது மொத்த உத்தியோகத்தர்களில் 57.53 சதவீதம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு