பஸிலை வாழ்த்தி யாழில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!! -கண்டும் காணாதது விட்ட பொலிஸ்-

ஆசிரியர் - Editor I
பஸிலை வாழ்த்தி யாழில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!! -கண்டும் காணாதது விட்ட பொலிஸ்-

நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள பசில் ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக யாழ் நகரப் பகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களினால் வெடி கொளுத்தியும், இனிப்பு பண்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இனிப்பு பண்டம் வழங்கும் நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஒன்று கூடல்களை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தினர். 


இருப்பினும் பொலிஸாரை எச்சரிக்கை செய்வது போல் உரத்த குரலில் தமது கோசங்களை எழுப்பிய அவர்கள் பொலிஸாரை பொருட்படுத்தாது தமது மகிழ்ச்சி கொண்டாட்டங்களை அங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு