பசிலிடம் கைமாறியது நிதியமைச்சு!

ஆசிரியர் - Admin
பசிலிடம் கைமாறியது நிதியமைச்சு!

பசில் ராஜபக்ஷ இன்று அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பசில் ராஜபக் நிதியமைச்சராக பசில் பதவியேற்றார்.

அதன்பின்னர் அவர் பாராளுமன்றத்துக்கு சென்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை காலமும் நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ கடமையாற்றியிருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு