யாழ்.நெல்லியடி மருந்தகத்தில் திருடிய திருடன் கைது! ஒரு குளிர்பான ஆசையால் பொதுமக்களே தேடி பிடித்தனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடி மருந்தகத்தில் திருடிய திருடன் கைது! ஒரு குளிர்பான ஆசையால் பொதுமக்களே தேடி பிடித்தனர்..

யாழ்.நெல்லியடியில் மருந்தகத்தை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய நகபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் கரவெட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும், குறித்த மருந்தகத்தில் அடிக்கடி கண்ணுக்கு மருந்து வாங்குவதற்காக 

வந்து செல்பவர் எனவும் தெரியவந்துள்ளது. இவர் திருடும்போது சிசிரி கமராவில் அவரின் முகம் தெளிவாக தெரிந்துள்ளது.

அதனை அடிப்படையாக வைத்து குறித்த நபரை அடையாளப்படுத்தி அவரின் வீட்டில் பார்வையிட்டபோது குறித்த நபர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் 

பொழுது அணிந்திருந்த உடை வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது. வீட்டில் சோதனையிட்டபோது மருந்தகத்தில் களவாடப்பட்டிருந்த மருந்துகள் 

மற்றும் ஒரு தொகை பணமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து 

நெல்லியடி பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு