யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு! மக்கள் கேட்டால் எழுத்துமூலம் விளக்கமளியுங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன் அறிவிப்பு! மக்கள் கேட்டால் எழுத்துமூலம் விளக்கமளியுங்கள்..

யாழ்.மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்படாத மக்கள் பிரதேச செயலகங்களில் முறையிட்டால் அது தொடர்பான விளக்கம் எழுத்துமூலம் வழங்கப்படும். என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

மாவட்டத்தில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தொிவில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள், மற்றும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கேட்டபோதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பில் மேலும் அரச அதிபர் கூறுகையில், 

வீட்டுத்திட்ட பயனாளிகள் தேர்வு மீண்டும் தொடக்கத்திலிருந்து நடப்பதாக சிலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் பயனாளிகள் தேர்வு தொடர்பாக சகல பிரதேச செயலர்களுக்கும் தெளிவான சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே தொிவுகள் நடக்கிறது. 

சில சமயங்களில் அதிகாரிகளுக்கு சில புரிதல்கள், தொிவுகளில் தாமதங்களை உருவாக்கியிருக்க கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் கால அவகாசம் வழங்கி சரியான பயனாளியை தொிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. எனவே வீட்டுத்திட்ட பயனாளியாக தேர்வு செய்யப்படாதோர்.

அது குறித்த உண்மையை அறிய விரும்பினால் உங்கள் பகுதி பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டால் அவர்கள் எழுத்துமூல விளக்கம் தருவார்கள். அதற்கான அறிவுறுத்தல் சகல பிரதேச செயலர்களுக்கும் அனுப்பபட்டுள்ளது. எனவே எழுத்துமூல விளக்கத்தை பெற்றால்

அது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காது, தவறுகள் நடந்திருப்பின் சுட்டிக்காட்ட பயனாளிக்கும் உதவியாக இருக்கும் என மாவட்ட செயலர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு