யாழ்.காரைநகரில் 98 கிலோ கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது, படகும் கைப்பற்றப்பட்டது! கடற்படையினர் அதிரடி..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் 98 கிலோ கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது, படகும் கைப்பற்றப்பட்டது! கடற்படையினர் அதிரடி..

யாழ்.கோவிலம் கடற்பகுதியில் கடற்படையினர் இன்று அதிகாலை நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின்போது சுமார் 98 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவானது சுமார் 29 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக கொவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றி இந்த சோதனை நடவடிக்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மூவரும், கிராஞ்சி, பேசாலை மற்றும் பூனரி பகுதியில் வசிப்வர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந் நிலையில் சந்தேக நபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக 

ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை நாட்டை சுற்றி 

ரோந்து பணிகளை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு