யாழ்.சாவற்கட்டு கிராமத்தை முடக்கலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை! 20 நாட்களுக்கு மேலாக தொடரும் முடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவற்கட்டு கிராமத்தை முடக்கலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை! 20 நாட்களுக்கு மேலாக தொடரும் முடக்கம்..

யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாவற்கட்டு கிராமத்தை முடக்கலில் இருந்து விடுவிப்பதற்கான பரிந்துரை மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியால் தேசிய கொவிட் தடுப்பு செயலணியிக்கு அனுப்பபட்டுள்ளது. 

குறித்த தகவலை யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார், அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் 16ம் திகதி மாவட்ட கொரோனா செயலணியின் பரிந்துரைக்கமைய

சாவற்கட்டு கிராமம் (ஜே-131) முடக்கப்பட்ட நிலையில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது கிராமம் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு