யாழ்.மாவட்டத்தில் 16 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பிறந்து 5 நாட்களான சிசுவும் உள்ளடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 16 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! பிறந்து 5 நாட்களான சிசுவும் உள்ளடக்கம்..

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களில் 16 சிறுவர்கள் எனவும், பிறந்த 5 நாட்களான சிசுவும் அதனுள் அடங்கியுள்ளதாகவும் சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 288 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதிலேயே, 65 பேருக்குதொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி, 

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் 16 சிறுவர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.தவிர,போதனா வைத்தியசாலையில் பிறந்து 5 நாட்களேயான சிசுவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு