யாழ்.அரியாலையில் மணல் கள்ளர்களுக்கும் அதிரடிப்படையினருக்குமிடையில் மோதல்! 4 அதிரடிப்படையினர் காயம், இரு கள்ளர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலையில் மணல் கள்ளர்களுக்கும் அதிரடிப்படையினருக்குமிடையில் மோதல்! 4 அதிரடிப்படையினர் காயம், இரு கள்ளர்கள் கைது..

கோப்புபடம்

யாழ்.அரியாலை பகுதியில் மணல் கடத்தல் கும்பலை தடுக்க சென்றிருந்தவர்களை தடுக்க சென்றிருந்த விசேட அதிரடிப்படையினர் மீது மணல் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 4 அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மண் அகழப்படுவதாக தகவலறிந்த நிலையில், 

சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர். இதன்போது கள்ள மண் கள்ளர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு