கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது சரமாரி கத்திக்குத்து! யாழ்.கோண்டாவில் பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீது சரமாரி கத்திக்குத்து! யாழ்.கோண்டாவில் பகுதியில் சம்பவம்..

யாழ்.கோண்டாவில் கொடுத்த கடனை கேட்க சென்றவர் மீத கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது.சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில் படுகாயமடைந்தார். 

சம்பவத்தையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு