யாழ்.மாவட்டத்தில் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கல் இன்று! சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பில், இராணுவம் களமிறக்கப்படுமா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கல் இன்று! சுகாதார ஊழியர்கள் புறக்கணிப்பில், இராணுவம் களமிறக்கப்படுமா..?

யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 2ம் கட்டமாக தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் சுகாதார ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை இன்று தொடக்கம் நடாத்த தீர்மானித்துள்ளது. 

இதனால் தடுப்பூசி வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் நேற்றய தினம் மாகாண சுகாதார அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் இதன்போது இராணுவத்தினரின் உதவியை பெற்று

திட்டமிட்டபடி இன்று தொடக்கம் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை தொடங்கவுள்ளதாக நேற்றய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. ஆனாலும் குறித்த விடயம் தொடர்பில் 

மாகாண சுகாதார பணிப்பாளர் அல்லது மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியிடமிருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பணிப் புறக்கணிப்பினால் 

வைத்தியசாலைகளின் செயற்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு