யாழ்.ஊர்காவற்றுறையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி! தொடர்பட்டவர்களை தனிமப்படுத்த முடியாத நிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி! தொடர்பட்டவர்களை தனிமப்படுத்த முடியாத நிலை..

யாழ்.ஊர்காவற்றுறையில் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பருத்தியடைப்பு கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் பெண் ஒருவரும் கலந்து கொண்டிருக்கின்றார். 

இந்நிலையில் பெண்ணுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கின்றது. இதனையடுத்து குறித்த பெண் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மருத்துவத்திற்காகச் சென்றிருக்கின்றார். 

அவரின் நோய் அறிகுறிகளை அவதானித்த வைத்தியர்கள் அவருக்கு அன்டிஜன் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

அதன் பெறுபேறுகள் வெளியான நிலையில் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குறித்த பெண்ணின் அயல் வீடு ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் ஒன்று நடைபெற்றிருப்பதாக தெரியவருகிறது.

இதனிடையே பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அவர்களை தனிமைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு