நயினாதீவுக்கு வருவதை தவிருங்கள்..! மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
நயினாதீவுக்கு வருவதை தவிருங்கள்..! மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை..

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்குமாறு பக்கதர்களிடம் ஆலய அறங்காவலர் சபை கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 

மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மட்டுமே நித்திய பூஜைகள் இடம்பெறுகின்றன. அடியவர்களின் நேர்த்திகள், 

அபிசேகங்கள் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை மீள ஆரம்பிக்கும் போது அடியவர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும். 

அதனால் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து உங்கள் வீடுகளில் இருந்தவாறு 

அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு