யாழ்.அல்லைப்பிட்டியில் விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்! 19 பேருக்கு விடுதியிலேயே தனிமைப்படுத்தல், விடுதியும் முடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டியில் விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்! 19 பேருக்கு விடுதியிலேயே தனிமைப்படுத்தல், விடுதியும் முடக்கம்..

யாழ்.அல்லைப்பிட்டியில் விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 19 பேர் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், விடுதி முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதனை அறிந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.

அத்துடன், நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு