யாழ்.கோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் கவலைக்கிடம், 14 பேரை கைது செய்ய 3 பொலிஸ் குழுக்கள் அமைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் கவலைக்கிடம், 14 பேரை கைது செய்ய 3 பொலிஸ் குழுக்கள் அமைப்பு..

யாழ்.கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கான 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

குறித்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

05 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 14 பேரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தங்கியிருந்த கட்டடம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என

இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு