யாழ்.மருதனார்மடம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதனார்மடம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்!

யாழ்.மருதனார்மடம் சந்தைக்கு முன்பாகவுள்ள வீட்டிற்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டிலுள்ளவர்களை தாக்கி அச்சுறுத்தியதுடன், பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 

இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். 4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து 

பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு