திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரிக்க சென்றவர்கள் மீது தாக்குதல்! இருவர் வைத்தியசாலையில், யாழ்.நாவற்குழியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரிக்க சென்றவர்கள் மீது தாக்குதல்! இருவர் வைத்தியசாலையில், யாழ்.நாவற்குழியில் சம்பவம்..

யாழ்.நாவற்குழி பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரிக்க சென்றிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டத்தில், இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, நாவற்குழி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அண்மையில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. 

இந்த சம்பவம் தொடர்பில் மத குரு ஒருவரும், நாவற்குழி 300 வீட்டுத்திட்டம் பகுதியை சேர்ந்த 25, 23 வயதான இரு இளைஞர்களும் தேவாலயத்துடன் தொடர்புடையகளிடம் விசாரிக்க சென்றிருக்கின்றனர். 

இதன்போது அங்கு நின்றவர்களால் இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டத்தில் காயமடைந்த இளைஞர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு