யாழ்.காரைநகரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் அதிகாலை முதல் முடக்கம்! கொரோனா தொற்றாளர் அதிகரிப்பை தொடர்ந்து நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் அதிகாலை முதல் முடக்கம்! கொரோனா தொற்றாளர் அதிகரிப்பை தொடர்ந்து நடவடிக்கை..

யாழ்.காரைநகரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை முதல் முடக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், 

இரு கிராமசேவகர் பிரிவுகளையும் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி கல்வந்தாழ்வு (J/ 45), கள்ளித்தெரு (J/40)வின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமங்களில் ஒரு கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் யாழ்.நகரில் உள்ள கட்டட ஒப்பந்ததாரர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதற்காக வந்து செல்வதாகவும் 

அவர்களில் சிலருக்கு முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு