யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றால் வீட்டில் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றால் வீட்டில் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று..

யாழ்.பருத்தித்துறை - தும்பளை பகுதியில் வீட்டில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவருடைய வீட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

73 வயதான முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் முதியவரின் வீட்டு சூழலில் ஏற்கனவே ஒரு குடும்ப பின்னணியில் உள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடிப்படையாக கொண்டு 

சந்தேகமடைந்த பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் இறந்த முதியவரின் உடலம் மீதும் அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்திருந்தார். 

குறித்த பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி உயிரிழந்தவருக்கும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் 3 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இறந்தவரின் சடலம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய, 

கோப்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதுடன், முதியவர் உயிரிழந்தவுடன் மரண வீட்டுக்கு சென்றுவந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு