யாழ்.மருதங்கேணியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் சீன நாட்டவர் அல்ல!

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதங்கேணியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் சீன நாட்டவர் அல்ல!

யாழ்.மருதங்கேணி வீதி புனரமைப்பு பணிகளில் சீன நாட்டவர்கள் ஈடுபட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் உள்ளவர் சீன நாட்டவர் அல்ல. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த புகைப்படத்தில் உள்ளவர் வடமராட்சி கிழக்கு பகுதியில் வசிப்பவர் என தொியவந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அவர் சீன நாட்டவர் அல்ல என்பது உறுதியானது. 

இதனையடுத்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் வருத்தம் தொிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அடுத்த தடவை சீன நாட்டவருடைய புகைப்படத்தை பதிவேற்றுவதாக கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு