யாழ்.ஈச்சமோட்டையில் வீட்டில் தனித்திருந்த பெண் மீது வாள்வெட்டு! கழுத்தில் வாள்வெட்டு காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஈச்சமோட்டையில் வீட்டில் தனித்திருந்த பெண் மீது வாள்வெட்டு! கழுத்தில் வாள்வெட்டு காயம்..

யாழ்.ஈச்சமோட்டை பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் கழுத்தில் வாள்வெட்டு காயத்துடன் குறித்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கின்றார். 

இச் சம்பவம் நேற்று காலை 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் காயமடைந்த பெண் கொழும்புத்துறை பகுதியிலுள்ள தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ள போதும் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையென தெரியவருகின்றது.

தாக்குதலாளியின் அச்சம் காரணமாக முறைப்பாடு செய்ய அஞ்சியிருக்கலாம் என தாக்குதலை உறுதிப்படுத்திய அயலவர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு