யாழ்.மாவட்டத்தில் 9 ஆயிரத்து 988 பேர் 2வது டோஸ் தடுப்பூசி பெற்றனர்! இன்றும் பணி தொடரும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 9 ஆயிரத்து 988 பேர் 2வது டோஸ் தடுப்பூசி பெற்றனர்! இன்றும் பணி தொடரும்..

யாழ்.மாவட்டத்தில் 9 ஆயிரத்து 988 பேர் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் 2வது டோஸ் வழங்கும் பணிகள் நேற்றய தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் 9 ஆயிரத்து 988 மக்கள் 2வது டோஸ் பெற்றுள்ளனர். 

18 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஊடகங்கள் மற்றும் நடமாடும் ஒலி பெருக்கி வாகனங்கள் மூலமாகவும் அறிவுறுத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. 

கடந்த மே மாதத்தின் இறுதியில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் 2வது டோஸ் வழங்குவதற்காக 50 ஆயிரம் தடுப்பூசிகளை

அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. மேலும் 2வது டோஸ் வழங்கும் பணிகள் தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

எனவே மக்கள் 2வது டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை தடுப்பூசி வழங்கும் பணி இடம்பெறவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு