யாழ்.வலி,வடக்கு மாவிட்டபுரம் பகுதியில் வெடிபொருள் மீட்பு! இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு மாவிட்டபுரம் பகுதியில் வெடிபொருள் மீட்பு! இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல்..

யாழ்.வலி,வடக்கு மாவிட்டபுரம் மீள்குடியேற்ற பகுதியில் நேற்றய தினம் ஞாயிற்றுக் கிழமை அபாயகரமான வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

வீட்டுக் காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது வெடி பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் 

தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புத் தரப்பினர் குறித்த வெடிபொருள் எந்த நாட்டினுடையது என 

நேற்று மதியம் வரை உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் வெளியிடவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு