கணவருடன் சென்றுகொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்! யாழ்.வேலணையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கணவருடன் சென்றுகொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்! யாழ்.வேலணையில் சம்பவம்..

கணவருடன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பெண் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்திருக்கின்றார். 

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த 32 வயதான குறித்த பெண் வேலணையிலிருந்து

தனது கணவருடன் முச்சக்கர வண்டியில் சுன்னாகத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். 

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே  உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு