யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தில் தகவல் தொழில் பூங்காவை நீங்கள் அமையுங்கள் ஆனால் பராமரிப்பது நாங்களே! அமைச்சர் நாமலுக்கு மாநகர முதல்வர் எடுத்துரைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தில் தகவல் தொழில் பூங்காவை நீங்கள் அமையுங்கள் ஆனால் பராமரிப்பது நாங்களே! அமைச்சர் நாமலுக்கு மாநகர முதல்வர் எடுத்துரைப்பு..

யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தில் தகவல் தொழிநுட்ப பூங்காவை அமையுங்கள். ஆனால் அதனை நாங்களே பராமரிப்போம். என யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவிடம் நோில் கூறியிருக்கின்றார். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இந்தியா அனுசரணையுடன் இடம்பெறும் கலாசார மத்திய நிலையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டபோதே மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா நிதி ஒதுக்கீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட வருகின்ற யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தின்திறப்பு விழாவை இரு நாட்டு அரசுகளும் இணைந்து கோலாகலமாக திறந்து வைப்பதற்கு அமைச்சர் நாமல் விருப்பம் தெரிவித்திருந்தார்

நாமும் அதனை வரவேற்று விரைவில் குறித்த கட்டடத்தை திறப்பதற்கு நாமும் விரும்புவதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தோம்.இவ்வாறான நிலையில் குறித்த கட்டடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை நிறுவுவதற்கு 

மத்திய அரசு விருப்பம் தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.குறித்த கட்டடத்தில் தகவல் தொழில்நுட்ப கூடத்தை அமைப்பதற்கு ஏதுவான பகுதியை அடையாளம் கண்டு செயற்படுத்துவதற்கு எவ்வித தடைகளும் இல்லை.

ஆனால் குறித்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவது மாநகர சபையாக இருக்கும் என நாமலிடம் மணிவண்ணன் நேரில் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு