யாழ்.பருத்தித்துறை - தும்பளையில் 6 மாத சிசு மற்றும் 9வயது, 13 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - தும்பளையில் 6 மாத சிசு மற்றும் 9வயது, 13 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி!

யாழ்.பருத்தித்துறை - தும்பளை பகுதியில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

நேற்று முன்தினம் வியாழக்கிழமை சளி காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற 13 வயதுச் சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவருடன் நேரடித் தொடர்பு கொண்ட குடும்பத்தினருக்கு நேற்று வெள்ளிக்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் 6 மாத குழந்தை மற்றும் 9 வயதுச் சிறுவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு