யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ்! பிரதமர் அலுவலகம் விடுத்திருக்கும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ்! பிரதமர் அலுவலகம் விடுத்திருக்கும் அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசி பெற்ற 50 ஆயிரம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் திங்கள் கிழமை ஆரம்பமாகவுள்ளது. 

மேற்படி தகவலை இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில் 

50 ஆயிரம் பொதுமக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு ரீதியில் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

அவ்வாறு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்கும் பணி வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என 

பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.இதற்காக சுகாதார அமைச்சினால் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ் 

ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு