தாய்க்கு கொரோனா தொற்று பிறந்த சிசு மரணம், கவலைக்கிடமான நிலையில் தாய்..

ஆசிரியர் - Editor I
தாய்க்கு கொரோனா தொற்று பிறந்த சிசு மரணம், கவலைக்கிடமான நிலையில் தாய்..

கொரோனா தொற்றுக்குள்ளான தாய் குழந்தை பிரசவித்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

குறித்த சம்பவம் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த கர்ப்பிணி தாய் லிந்துலை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 

இவர் பிரசவித்த சிசு நேற்று உயிரிழந்துள்ளது. இதனையடுத்து தாயின் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு