யாழ்.குருநகரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்! 78 பேருக்கு கொரோனா, 2 பேர் கொரோனா தொற்றால் மரணம், பரவல் தீவிரமடைவதை தடுக்கவே முடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்! 78 பேருக்கு கொரோனா, 2 பேர் கொரோனா தொற்றால் மரணம், பரவல் தீவிரமடைவதை தடுக்கவே முடக்கம்..

யாழ்.குருநகர் பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகள் நேற்று மாலை தொடக்கம் முடக்கப்பட்டிருக்கின்றது. 

ஜே/69 கிராம சேவகர் பிரிவில் 34 தொற்றாளர்களும், ஜே/71 கிராமசேவகர் பிரிவில் 38 தொற்றாளர்களுமாக சுமார் 78 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து மாவட்ட கொவிட் தடுப்பு செயலணிக்கு வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நேற்று மாலை தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது. 

குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் சுமார் 1599 குடும்பங்களை சேர்ந்த, 4820 பேர் வசித்துவருகின்றனர். 

மேலும் குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் 2 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தொிவித்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு