யாழ்.பருத்தித்துறை - அல்வாயில் சுகாதார நடைமுறைகளை மீறி வேள்வி..! கோவில் பூசகர் கைது, 30 பேர் தனிமைப்படுத்தலில், மேலும் ஒருவர் தேடப்படுகிறார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - அல்வாயில் சுகாதார நடைமுறைகளை மீறி வேள்வி..! கோவில் பூசகர் கைது, 30 பேர் தனிமைப்படுத்தலில், மேலும் ஒருவர் தேடப்படுகிறார்..

யாழ்.பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசங்கள் கூட இல்லாமல் மக்களை கூட்டி வேள்வி பொங்கல் நடத்திய விறுமர் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

அல்வாய் வடக்கு விருமார் கோயில் பொங்கல் மற்றும் வேள்வி நிகழ்வு 500 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடி கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காமல் நடத்தியுள்ளனர் சுகாதார பகுதியினரின் எந்தவிதமான அனுமதிகள் எதுவும் பெறப்படாது 

இவ்வாறு அதிக அளவான எண்ணிக்கையில் மக்களை ஒன்று கூட்டி க கொரோனா பரவலுக்கு ஏதுவான நிலையைத் தோற்றுவித்தமைய் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர்களும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனையில் சட்ட விதிமுறைகளை மீறுவதற்கு காரணமாயிருந்த கோயில் நிர்வாகியும் 

அதனோடு இணைந்து செயல்பட்ட ஏனைய 30 பேரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்ட தோடு கோயில் நிர்வாகி மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்களதும் பொலிசாரதும் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த அப்பகுதி இளைஞர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

அவர் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களை கொண்டு அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக ஒன்றுகூடல் களை மேற்கொள்வதால் அதிகளவான நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு தேவையற்ற இழப்புகளை சமூகம் எதிர்நோக்க வேண்டிவரும் என தெரிவிக்கப் படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு