கட்டப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்தக்குள்ளான மோட்டார் சைக்கிள்! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, யாழ்.ஏழாலையில் சம்பவம்..

யாழ்.ஏழாலை வடக்கு பகுதியில் இன்று மாலை கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.