யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது! ஆபத்தான நிலை நீடிப்பதாக மாவட்ட செயலர் கருத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது! ஆபத்தான நிலை நீடிப்பதாக மாவட்ட செயலர் கருத்து..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 அயிரத்தை நெருங்குவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

தற்போதுவரை மாவட்டத்தில் 4919 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், குறிந்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 696 நபர்கள் 

குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே 

மாவட்டச் செயலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் இதுவரை 72 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.

மேலும் நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கட்டுவரும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு யாழ்.மாவட்டத்தில் இதுவரை 

71 ஆயிரத்து 721 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு