SuperTopAds

யாழ்.வேலணையில் கரை ஒதுங்கிய கடலாமை உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வேலணையில் கரை ஒதுங்கிய கடலாமை உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது!

யாழ்.வேலணை - துறையூர் பகுதியில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த கடலாமையின் நீளம் 28 இஞ்ச்,

அகலம் 22 இஞ்சி மற்றும் சுற்றளவு 63 இஞ்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (21) இந்த கடலாமை கரையொதுங்கியதை மீனவர்கள் அவதானித்ததுடன் 

இதுதொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை குறித்த பகுதிக்கு வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் 

கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.