யாழ்.தொண்டமனாறு கடற்பகுதி ஊடாக 173 கிலோ கஞ்சாவுடன் கரைக்குவந்த இருவர் கைது! கஞ்சாவும் மீட்பு, கடற்படையினர் அதிரடி..

ஆசிரியர் - Editor I
யாழ்.தொண்டமனாறு கடற்பகுதி ஊடாக 173 கிலோ கஞ்சாவுடன் கரைக்குவந்த இருவர் கைது! கஞ்சாவும் மீட்பு, கடற்படையினர் அதிரடி..

யாழ்.தொண்டமனாறு கடற்பகுதி ஊடாக சுமார் 173 கிலோ கஞ்சா கடத்திவந்த இருவர் இன்று அதிகாலை கடற்படையினால் கைது செய்யப்பட்டதுடன், கடத்திவரப்பட்ட கஞ்சாவும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது தொண்டமனாறு கடற்பரப்பில் ஊடாக படகு ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் தொடர்ந்தும் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு