யாழ்.உடுவிலில் மருத்துவரின் வீடு உட்பட 7 அரச ஊழியர்களின் வீடுகள் உடைத்து பட்டப்பகலில் துணிகரன கொள்ளை! 3 பேர் கொண்ட கும்பல் பொருட்களுடன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவிலில் மருத்துவரின் வீடு உட்பட 7 அரச ஊழியர்களின் வீடுகள் உடைத்து பட்டப்பகலில் துணிகரன கொள்ளை! 3 பேர் கொண்ட கும்பல் பொருட்களுடன் கைது..

யாழ்.உடுவில் பகுதியில் மருத்துவர் ஒருவருடைய வீடு உட்பட அரச உத்தியோகஸ்த்தர்களின் 7 வீடுகளை உடைத்து கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் , வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மூளாய் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த மூவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அரச உத்தியோகத்தர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் செல்லும் வேளையில் கடந்த சில நாள்களாக பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டுகள் இடம்பெற்றுள்ளது. 

சுமார் 7 வீடுகள் உடைத்து திருட்டுப் போனமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு